தமிழக அரசால் செயல்பட்டு கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தை சீரமைக்க வேண்டும், தாலுகா அளவில், மாவட்ட அளவில் உள்ள பத்திரிக்கையாளர்களை நல வாரியத்தில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழக அரசால் செயல்பட்டு கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தை  சீரமைக்க வேண்டும், தாலுகா அளவில், மாவட்ட அளவில் உள்ள பத்திரிக்கையாளர்களை நல வாரியத்தில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர்  தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் : பிப்,25.

*திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர்தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம், ஈடுபட்டனர் !*

*அதில், தமிழக அரசு உடனடியாக பத்திரிக்கையாளர் நல வாரியத்தை சீரமைக்க வேண்டும் , தாலுகா அளவில் மற்றும் மாவட்ட அளவில் உள்ள பத்திரிகையாளர்களை நலவாரியத்தில் இணைக்க வேண்டும், முதலாளிகளைக் கொண்டு இயங்கி வரும் நல வாரியத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் நலவாரியத்தில் பத்திரிக்கையாளர்கள் இணைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*
*தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பத்திரிக்கையாளர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்!*
*ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கோரிக்கை மனுவாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ். ஆர். சுபாஷ் வழங்கினார்.
*ஆட்சியரிடம் பத்திரிகையாளர் சங்க தலைவர் பேசுகையில் கூறுகையில் இந்த மனுவை நீங்கள் பத்திரிகையாளர்கள் வழங்கிய இந்த மனுவினை தமிழக அரசுக்கு வழங்கி அனுப்பி மாவட்ட அளவில் மற்றும் தாலுகா அளவில் பல்வேறு இன்னல்களுக்கு இடையே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு விடிவு ஏற்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் நல வாரியத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.
*மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசின் கவனத்திற்கு உங்கள் கோரிக்கையை அனுப்புகிறேன் என்று தெரிவித்தார் மாவட்ட ஆட்சியருக்கு அனைத்து பத்திரிகையாளர்களும் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பொன்னேரி ஜி. பாலகிருஷ்ணன், மாநிலத் இணைச் செயலாளர் N.வினோத்குமார், மாவட்ட செயலாளர் தமிழன், சிட்டிபாபு,  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மில்டன், செயலாளர் அருள் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் A.லட்சுமணன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் போரூர் ஜனா, VAO G. சந்திரன், மற்றும் S. மணிவேலு, இன்சூரன்ஸ் B. கௌரி, PRO அருண், S. K. சத்யநாராயணா, சேவகன் மீடியா  விஜயகுமார், உட்பட பலர்  கலந்து கொண்டனர்.
*திருவள்ளூர் மேற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன் போராட்டத்தில் இறுதியாக நன்றியுரை நிகழ்த்தினார்.
Popular posts
இந்திய குடியரசு கட்சியின் நகர நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் நகர நிர்வாகிகள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது
Image
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி பெருமளவு அதிகரிப்பு: வரலாறு படைத்த முதல் ஏற்றுமதிப் பொருட்கள்
Image
ஒற்றுமையின் மகா கும்பமேளா – புதிய சகாப்தத்தின் விடியல் -பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு புரட்சிகர மாற்றத்தை செய்து வருகிறது
Image