பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி பெருமளவு அதிகரிப்பு: வரலாறு படைத்த முதல் ஏற்றுமதிப் பொருட்கள்
சென்னை :
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. பல்வேறு வேளாண் உற்பத்திப் பொருட்கள் முதல் முறையாக சர்வதேச சந்தைகளுக்குச் செல்கின்றன. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம். வர்த்தகம் தொடர்பானது மட்டுமல்ல. இது விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதாகும். கிராமப்புற வருமானத்தை அதிகரிப்பதும் இந்தியாவின் வளமான விவசாய பாரம்பரியத்தை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வதும் இதன் பலன்களாகும். கவர்ச்சியான பழங்கள் முதல் பாரம்பரிய ஸ்டேபிள்ஸ் வரை, இந்த முதல் ஏற்றுமதிகள், தற்சார்பு பாரத்திற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் நோக்கத்தின் மூலம், இந்திய விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் கீழ் முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட சில ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வேளாண் பொருட்கள்:
ஆஸ்திரேலியாவுக்கு முதன்முறையாக இந்திய மாதுளை ஏற்றுமதி:
இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, முறையே பிரீமியம் சங்கோலா, பக்வா மாதுளைகளை ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக இந்தியா வெற்றிகரமாக அனுப்பியது. இந்த முன்னேற்றம் ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் புதிய பழ சந்தை அணுகலை மேம்படுத்தும். மேலும் இந்திய விளைபொருட்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நுழைவதற்கு இது வழி வகுக்கிறது.
அத்திப்பழச் சாறு போலந்துக்கு முதல் முறையாக ஏற்றுமதி:
இந்தியாவின் தனித்துவமான புவிசார் குறியீடு கொண்ட புரந்தர் அத்திப்பழங்கள் இப்போது ஐரோப்பாவில் புதிய வரவேற்பைப் பெற்றுள்ளன. 2024-ம் ஆண்டில், புரந்தர் அத்திப்பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட அத்திச்சாற்றை போலந்துக்கு ஏற்றுமதி செய்ய அரசு வசதி செய்தது. முன்னதாக 2022-ம் ஆண்டில், ஜெர்மனிக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. புரந்தர் அத்திப்பழங்கள் அவற்றின் தனித்துவமான சுவைக்குப் பெயர் பெற்றவை. இந்தியாவின் தனித்துவமான வேளாண் பொருட்களை உலக அரங்கில் ஊக்குவிப்பதில் இந்த நிகழ்வுகள் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளன.
டிராகன் பழம், முதல் முறையாக லண்டனுக்கும் பஹ்ரைனுக்கும் ஏற்றுமதி:
இந்தியா தனது பழ ஏற்றுமதியை பல்வகைப்படுத்துவதன் ஒரு பகுதியாக, உள்நாட்டில் 'கமலம்' என்று அழைக்கப்படும் நார்ச்சத்து, தாது நிறைந்த டிராகன் பழம், 2021-ம் ஆண்டில் லண்டனுக்கும் பஹ்ரைனுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பழங்கள் குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டன, அதே நேரத்தில் பஹ்ரைனுக்கு அனுப்பப்பட்ட பழங்கள் மேற்கு மிட்னாபூரின் (மேற்கு வங்கம்) விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டது.
அமெரிக்காவிற்கு மாதுளையின் முதல் சோதனை ஏற்றுமதி:
2023-ம் ஆண்டில், அமெரிக்காவிற்கு மாதுளைகளின் முதல் சோதனை ஏற்றுமதி விமானம் வழியாக நடைபெற்றது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பக்வா மாதுளை கணிசமான ஏற்றுமதி திறனைக் கொண்டுள்ளது.
அசாமின் 'லெட்டேகு' பழம் துபாய்க்கு ஏற்றுமதி:
வடகிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, 2021-ம் ஆண்டில், அசாமிய மொழியில் 'லெட்டேகு' என்று அழைக்கப்படும் பர்மிய திராட்சைகளின் முதல் தொகுப்பு குவஹாத்தியில் இருந்து தில்லி வழியாக துபாய்க்கு அனுப்பப்பட்டது. இந்த ஏற்றுமதி அசாமின் உற்பத்தியை உலக வரைபடத்திற்குக் கொண்டு சென்றது.
திரிபுராவில் இருந்து ஜெர்மனிக்கு பலாப்பழம் ஏற்றுமதி:
2021-ம் ஆண்டில் திரிபுராவில் இருந்து இந்தியாவின் பலாப்பழம் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒரு மெட்ரிக் டன் பலாப்பழங்களின் முதல் சரக்கு அகர்தலாவில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்களைக் கொண்டுவர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது.
நாகாலாந்தில் இருந்து முதன்முறையாக லண்டன் சென்ற மிளகாய் வகையான 'ராஜா மிர்ச்சா'
2021-ம் ஆண்டில், வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து புவிசார் குறியீடு தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, நாகாலாந்தில் இருந்து கிங் சில்லி என்று குறிப்பிடப்படும் 'ராஜா மிர்ச்சா' முதல் முறையாக குவஹாத்தி வழியாக லண்டனுக்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் அழுகும் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த தயாரிப்பை ஏற்றுமதி செய்வது ஒரு சவாலாக இருந்தது. ஆனால் இந்தியா விமானம் மூலம் ஏற்றுமதி அதை வெற்றிகரமாக எளிதாக்கியது. சிறப்பு வேளாண் ஏற்றுமதியைக் கையாள்வதில் இந்தியாவின் திறன்களை இது எடுத்துக்காட்டுகிறது.
அசாமில் இருந்து அமெரிக்காவுக்கு 'சிவப்பு அரிசி' ஏற்றுமதி:
2021-ம் ஆண்டில், இந்தியாவின் 'சிவப்பு அரிசி'யின் முதல் தொகுப்பு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. இரும்புச்சத்து நிறைந்த 'சிவப்பு அரிசி' அசாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில், எந்த ரசாயன உரமும் பயன்படுத்தாமல் பயிரிடப்படுகிறது. இந்த அரிசி வகை 'பாவோ-தான்' என்று குறிப்பிடப்படுகிறது. இது அசாமிய உணவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
கேரளாவில் இருந்து துபாய், ஷார்ஜாவுக்கு வாழக்குளம் அன்னாசிப்பழத்தின் முதல் ஏற்றுமதி:
2022-ம் ஆண்டில், கேரளாவின் எர்ணாகுளம், வாழக்குளத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய், ஷார்ஜா ஆகிய இடங்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற "வாழக்குளம் அன்னாசிப்பழம்" ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் அன்னாசி விவசாயிகள் சிறந்த வருமானத்தைப் பெறுவார்கள் என்பதுடன் உலக சந்தையில் தங்கள் உற்பத்தியை அதிக அளவில் விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.